Blog

Article : மருத்துவம் அறிவோம்- 'கீழ் முதுகு வலி'

‘கீழ் முதுகு வலி’ என்ற பாதிப்பினைப் பற்றி ஒரு முறையாவது உலகில் சொல்லாது இருப்பவர்கள் மிகக்குறைவு எனலாம். அதுவும் இந்த கால கட்டத்தில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து இருப்பவர்களுக்கு இது சர்வ சாதாரணமாய் ஏற்படும் பாதிப்பு ஆகும். நாம் கொடுக்கும் அழுத்தம் தசை நார்களிலும், தசைகளிலும் அத்தகைய ஒரு பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.

இது போக உள் உறுப்புகளான வயிறு, ஓவரிஸ், சிறுநீரகம் போன்ற சில கீழ் முதுகு பகுதிகளும், தண்டு வடமும் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் பொழுது பின் கீழ் முதுகு வலி ஏற்படுகின்றது.

இரு பாலாரும் இத்தகு பாதிப்பிற்கு உள்ளாவர். என்றாலும் பெண்களுக்கு கூடுதலாகவே காணப்படுகின்றது. இது பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுதல்களால் இருக்கலாம்.

* தசைகளும், தசை நார்களும் பாதிக்கப்படுவதால் ஏற்படும் வலியே அநேகமாக முக்கிய முதல் காரணமாக இருக்கின்றது. அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது, முறையற்று எடைகளை தூக்குவது, வேகம் வேகமாய் திரும்புவது, கோணல், மாணலாய் அமர்வது இவை அனைத்தும் வலி ஏற்படவும் பாதிப்பிற்கும் காரணமாகின்றது.

* கர்ப்ப காலம்: இக்காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகளாலும், கருப்பை விரிவடைவதாலும் கீழ் முதுகு வலி ஏற்படுகின்றது.

* இதுபோன்றே மாதவிடாய் ஏற்படும் காலங்களிலும் ஹார்மோன் மாறுபாடுகளால் கீழ்முதுகு வலி ஏற்படுகின்றது.

* என்டோமெட்ரியோசியஸ்: கருப்பைக்கு வெளிவரும் திசுக்கள் என்டோமெட்ரியோசியஸ் என குறிப்பிடப்படுகின்றது. இது இடுப்பு, கீழ் முதுகு பகுதிகளில் மாதவிடாய் காலங்களில் கடும் வலியினை ஏற்படுத்தும்.

* எலும்புகளின் பலவீனம் காரணமாக வலி ஏற்படலாம்.

* உடலின் ஒரு பக்க வலி, கால், இடுப்பு பகுதிகளில் வலி, கழுத்தை திருப்பும், நகர்த்தும் போது ஏற்படும் வலி. இவற்றுக்கு தண்டுவட பாதிப்பு இருக்கின்றதா? என பரிசோதித்து கொள்ள வேண்டும்.

* மன உளைச்சல், மனச் சோர்வு காரணத்தினால் வலி ஏற்படலாம்.

* நிமிர்ந்து நேராய் அமர பழக வேண்டும்.

* எடைகளை தூக்கும் போது கவனம் தேவை.

* அதிக உணர்ச்சி வசப்படுதலை கண்டிப்பாய் தவிர்க்க வேண்டும்.

* வலியினை அலட்சியப் படுத்தாது ஆரம்ப நிலையிலேயே மருத்துவ கவனம் பெற வேண்டும்.

* சுறு சுறுப்பான வாழ்க்கை முறை வேண்டும். மணிக்கொரு முறை சில நிமிடங்களாவது நடக்க வேண்டும்.

சிறுநீரகம்: இரு சிறுநீரகங்களும் இருபுறமாக மார்பக கூட்டின் கீழ் உள்ளன. உடலில் அதிக நீர், கழிவு இவற்றினை வெளியேற்றுகின்றது, தாதுக்களை சீராய் வைக்க உதவுகின்றது. சிவப்பு ரத்த அணுக்கள் உருவாகின்றது. ரத்த அழுத்தத்தினை சீராய் வைக்கின்றது. எலும்புகள் ஆரோக்கியமாய், வலுவாய் இருக்க உதவுகின்றது.

சிறுநீரகத்தில் பாதிப்பு என்றாலே மிக அதிக கவனம் செலுத்த வேண்டிய ஒன்றுதான். ஆகவே தான் சில அறிகுறிகள் ஏற்படும் போது மிக அதிக கவனம் செலுத்த வேண்டும். அவ்வகையில் சிறு நீரில் கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவர் கவனம் பெற வேண்டும்.

* சிறுநீர் வெளி செல்வதில் கடினம்.

* வெளிறிய சிறுநீர், அடிக்கடி அதிக அளவு சிறுநீர் வெளி செல்லுதல்.

* நுரைத்த சிறுநீர்.

* அடர்ந்த நிற சிறுநீர், மிகக் குறைந்த அளவே சிறுநீர் செல்லுதல்.

* இரவில் அடிக்கடி சிறுநீர் செல்லுதல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர் கவனம் பெற வேண்டும்.

வீக்கம்: சிறுநீரகத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டிருக்கும் போது சிறுநீரகத்தினால் உடலில் உள்ள அதிக நீரினை வெளியேற்ற முடியாது. அப்போது முகம், மூட்டுகளில் வீக்கம் ஏற்படும்.

வாயில் உலோகம் போன்ற சுவை: கழிவுகள் வெளியேறாமல் ரத்தத்தில் இருப்பதால் ஒரு வித்தியாசமான சுவை உணர்வு நாக்கில் தெரியும். சிறுநீரகம் அதிகம் பாதித்து இருந்தால் இந்த சுவை உணர்வு கூடுதலாய் தெரியும். பசி இருக்காது.

மேல் முதுகு வலி: சிறுநீரக பாதிப்பு, கிருமி பாதிப்பு, சிறுநீரக கல் இவை கடும் வலியினை ஏற்படுத்தும்.

சோர்வு: சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருந்தால் சிவப்பு அணுக்கள் உற்பத்தியும் நன்கு இருக்கும். சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் போது அதிக சோர்வு, தசைகள் பாதிப்பு, மூளை பாதிப்பு ஆகியவை ஏற்படும்.

மூச்சு வாங்குதல்: சிறுநீரக பாதிப்பு ஏற்படும் போது மூச்சு வாங்குதல் இருக்கும். சிகப்பு ரத்த அணுக்கள் குறைபாட்டினால் ஆக்சிஜன் குறைபாடு ஏற்படுவதால் மூச்சு வாங்கும்.

கவன ஈடுபாடு இராது, தலை சுற்றல் இருக்கும்: மூளைக்கு ஆக்சிஜன் குறைபாடு ஏற்படுவதால் கவன ஈடுபாடு இன்மை, தலை சுற்றல் ஏற்படும்.

சரும பாதிப்பு: கழிவுகள் ரத்தத்தில் தேங்குவதால் அரிப்பு, வறட்சி, சரும பாதிப்பு என ஏற்படும்.

மேற் கூறியவை எல்லாம் ஆபத்தான சிறுநீரக பாதிப்பின் வெளிப்பாடுகள்தான். வருடம் ஒருமுறை எப்போதுமே அனைவரும் செக்அப் செய்து கொள்வது பல பிரச்சினைகளில் இருந்து நம்மை காக்கும்.

மக்னீசியம்: ஒரு சில சத்து குறைபாடுகளால் ஏற்படும் அறிகுறிகளை நாம் கவனிக்கத் தவறி விடுகின்றோம். ஒரு சத்து குறைபாடே பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.

இன்றைய ஆய்வுகள் சத்து குறைபாடுகளை பற்றியும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் நிறைய ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டு உள்ளன. இந்த வெளியிட்டும் வருகின்றன.

அதில் மக்னீசியம் குறைபாட்டினை பற்றியும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் வெளியிடப்பட்டுள்ளன. கருத்துக்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. மக்னீசியம் உடலுக்கு மிக அவசியமானது. இதனை உணவில் இருந்து பெறுவது மிக கடினமானது அல்ல. விதைகள், கொட்டைகள், அடர்ந்த நிறம் கொண்ட கீரைகள், பீன்ஸ் இவையெல்லாம் மக்னீசியம் சத்து நிறைந்ததே.

மக்னீசியம் குறைபாடு என்னென்ன அறிகுறிகளைக் காட்டும் என்பதனைப் பார்ப்போம்.

. பலமின்மை.

. தடுமாற்றம்.

. மறதி.

. குழப்பம்

. கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு.

. விழுங்குவதில் கடினம்.

. கால்ஷியம் பற்றாமை.

. எலும்பு தேய்மானம்.

. சர்க்கரை அளவு குறைதல்.

. பட படப்பு.

. குடலில் கெட்ட கிருமிகள்.

. செயல் பாடுகளில் நிறுத்தம் ஏற்படுதல்.

. சிறுநீர் பை வீக்கம், கட்டிகள்.

. தசைகளில் பலவீனம்.

. எதுவுமே முடியவில்லை என்ற நிலை.

. உயர் ரத்த அழுத்தம்.

. சரியான தூக்கமின்மை.

. கர்ப்ப காலத்தில் பிரச்சினை.

. தலைவலி. வலிப்பு.

. ஆஸ்துமா. பொட்டாசியம் குறைபாடு.

. பல் சொத்தை. அதிக குழப்பம்.

. தலைவலி.

. ரத்த கொத்துகள்.

. ரேடான்ட்ஸ் குறைபாடு பாதிப்பு.

. நடுக்கம்.

. நீரிழிவு நோய் பிரிவு 2.

. குண மாறுபாடுகள்.

. இருதய கோளாறுகள்.

. மூச்சு மண்டல பிரச்சினைகள் என இவ்வளவு பாதிப்புகளைக் காட்டும்.

. பூசணி விதை . சியா விதை.

. பாதாம்.

. பசலை.

. முந்திரி.

. வேர்கடலை.

. சோயாபால்.

. முழுதானி யங்கள் மூலம் இதனை நாம் பெற முடியும்.

மேலும் ஆப்பிள்

. பீன்ஸ்பிரிவுகள்

. பால்

. வாழைப் பழம்.கறுப்பு திராட்சை

. காரட்

இவைகளும் மக்னீசியம் சத்து கொண்டவை ஆகும்.

எத்தனை முறை நடை பயிற்சியினைப் பற்றி எழுதினாலும் மீண்டும் மீண்டும் அதனை படித்தாலே உறுதி நீடிக்கின்றது. இதன் காரணமாகவே அன்றாடம் 30 நிமிட நடை பயிற்சியின் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

. இருதய பாதிப்புகள் குறையும்.

. எடை சீராய் இருக்கும்.

. ஸ்ட்ரெஸ் குறையும்

. சக்தி கூடும்.

. ரத்த ஓட்டம் சீராகும்.

. மனநிலை நன்கு இருக்கும்.

. படபடப்பு நீங்கும்.

. தொள தொளவென்ற உடல் இருக்காது.

. தூக்கம் நன்கு வரும்.

. புற்று நோய் தவிர்ப்பதற்கு உதவும்.

. உடல், கை, கால் ஒரு சேர இயங்கும்.

. தசைகளும், எலும்பும் வலுப்பெறும்.

. நீரிழிவு பிரிவு 2 பாதிப்பு குறையும்.

. நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

. உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

ஆக நடை பயிற்சியினை விடாது செய்வோம்.

Compiled: trendnews100.com
Article in Hindi, ट्रेंडिंग Blog, Tranding letest Blog in hindi, Blog news, latest Blog news,

disclaimer : इस पोस्ट में मौजूद किसी भी कंटेंट के लिए Trend News की कोई जिम्मेदारी या दायित्व नहीं है(article news in hindi)ं. पाठकोंहमारे facebook, Twitter पेजों के जरिए हमसे संपर्क कर सकते है(article news in hindi)ं।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button