Blog

Article : வாழ்க்கையில் அறியாமை வேண்டாம்

வாழ்க்கைக்கு நல்ல உணவு, உடற்பயிற்சி என்பது மட்டும் முக்கியம் அல்ல. வாழ்க்கைக்கு சில கட்டுப்பாடுகள், சாமர்த்தியங்கள் அவசியமாகின்றன. அவைகளை நாம் அறிந்து பின்பற்றுகின்றோமா? பார்ப்போம்.

நம்முடைய திட்டங்களை தம்பட்டம் அடிக்கக் கூடாது. அதனை எதிராளிகள் நாசப்படுத்தி விடக்கூடும்.

நமது பல வீனங்களை பிறர் அறிய வேண்டிய அவசியம் இல்லை. பகிரக் கூடாது. ஏனெனில் நமக்கு எதிராகவே பிறர் அதனை பயன் படுத்தி விடுவர்.

நமது வாழ்வில் சில தோல்விகள் ஏற்பட்டு இருக்கலாம். நம்முடன் பழகும் நட்புகளுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல உங்களைப் பற்றிய அனைத்தினையும், தோல்விகள் உள்பட அனைத்தையும் அறிவிக்க போர்டு வைக்க வேண்டாம்.

மற்றவர்கள் உங்கள் தோல்விகளைக் கண்டு மிகவும் குறைத்து எடை போடுவார்கள். இளக்காரமாய் பார்ப்பார்கள். வாய்ப்புகளை நமக்கு அளிக்க மாட்டார்கள்.

அதே போல் அடுத்த நகர்வு மற்றும் நிகழ்வினையும் சொல்ல வேண்டாமே. வாழ்க்கை செஸ் விளையாட்டு போல்தான். அமைதியாக எதனையும் செயலில்தான் காட்ட வேண்டும். உங்கள் வெற்றிகள் அவர்களை அதிசயிக்க வைக்க வேண்டும்.

உங்களது ரகசியங்கள் உங்களுக்குள்தான் இருக்க வேண்டும். புத்திசாலித்தனம் இல்லாதவர்தான் தன் ரகசியங்களை பிரகடனப்படுத்துவார்.

நமது வருமானம் சம்பாதிக்கும் முறை. கண்டிப்பாய் நியாயமானதாக இருக்க வேண்டும். இது வருவாய் துறைக்கு தெரிந்தால் போதும். பிறருக்கு அல்ல.

(இக்கட்டுரையில் கூறப்படுபவை சில அறிவாளிகளின் எழுத்தினை படித்து தொகுக்கப்பட்டவை. இதனை பகிர்வது நன்மை என்பதாலேயே எழுதப்பட்டுள்ளது. பலர் பஸ்சில், ரெயிலில் பயணம் செய்யும் காலங்களில் சில மணி நேரத்திற்குள் அவரது குடும்ப விவரங்களை பட்டியல் இட்டு விடுவார்கள். இது அவர்களுக்கே எத்தனை தீங்காக முடியும் என்பதனை விளக்கவே இக்கருத்துகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன).

வாழ்க்கை என்பது மென்மையான ரோஜா இதழ்கள் கொண்ட பாதை அல்ல, முட்களும் இருக்கும். காலம் மிகவும் மாறி விட்டது. உடனடி லாபம், குறுக்கு வழியில் லாபம் என்பது சற்று பெருகி விட்டது. பள்ளியில் பல நீதி போதனைகளை மாணவ சமுதாயத்திற்கு பதிய வைக்கின்றோம்.

ஆனால் தன்னை காயப்படுத்திக் கொள்ளாமல் இருக்க அவர்களுக்கு நாம் சொல்லித் தருவதில்லை. இந்த பாதுகாப்பு இல்லாமல் கருமை நிறைந்த சமுதாயத்தில் அவர்கள் காலை வைக்கும் போது மனதளவில் அதிக காயம் பட்டு கருகி விடக்கூடாது. குறிப்பாக இளைய சமுதாயம் இதனையும் உணர வேண்டும்.

காதல், அன்பு என்ற பெயரில் ஒருவருக்காக உறவுகளை உதறி, தாய், தந்தையர் அன்பினை தூக்கி எறிந்து முன்பின் முழுமையாய் அறியாத ஒருவருடன் ஓடி வருவது இன்று நாம் காணும் சாதாரண நிகழ்வு ஆகி விட்டது. ஆனால் அந்த ஒருவர் இவரை கைவிட்டு மற்றொருவருடன் ஓடி விடுவதையும் நிறைய பார்க்கின்றோம்.

கமலி ஸ்ரீபால்

இதில் ஆண், பெண் என பிரித்து கூறவில்லை. இரு பாலருக்குமே இத்தகு பாதிப்புகள் நிகழ்கின்றன. அனைவருக்கும் இப்படி நிகழ்கின்றது என்பதில்லை. ஆனால் அதிகம் நிகழ்கின்றது என்பதே உண்மை. இதனை இளைய சமுதாயம் மனதில் பதிய வைக்க வேண்டும்.

மக்களிடம் ஒரு பிரச்சினை இருக்கின்றது. எது உண்மை என அவர்களால் அறிந்து கொள்ள முடிகின்றது, உணர முடிகின்றது. இருப்பினும் மாயையிலேயே, உண்மை அல்லாதவைகளையே அவர்கள் பின்பற்றுகின்றார்கள். இதனை அறியாமை என்பதா? அறிவின்மை என்பதா?

வாழ்நாள் முழுவதும் உங்களோடு இருக்கப் போவது நீங்கள் மட்டுமே. ஆகவே உங்கள் உடல், உங்கள் மனம், உங்கள் ஆரோக்கியம், உங்கள் உணவு என உங்களை சேர்ந்த ஒவ்வொன்றிலும் அக்கறையுடன் இருக்க வேண்டும்.

பிறர் உங்களை எப்படி பார்க்கின்றார்கள்? எவ்வளவு உங்களை மதிக்கின்றார்கள் என்பதே முக்கியம்.

உங்களது நியாயமான முயற்சிகள், கோரிக்கைகளுக்கு உதவியோ, ஊக்குவிப்போ செய்யாதவர்களுக்காக உங்கள் காலம், நேரம், பொருள், உழைப்பு இவற்றினை வீண் செய்யாதீர்கள்.

பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என தேவையற்ற யோசனையில் உங்களது சக்தி வீணாகக் கூடாது.

நம்மை குறைத்து கொண்டு, ஒரு பக்க உறவாக ஒருவரிடம் தொங்க வேண்டாம். நல்ல மனம் கொண்ட நமது உறவு வேண்டாமென ஒதுக்குவது எதிராளியின் இழப்பு.

வேலை, காரியம் இவற்றுக்காக மட்டும் நம்மை நாடுபவரை ஒதுக்கி விட வேண்டும்.

பிறரது பிரச்சினைகளை அலைந்து, அலைந்து நீங்கள் தீர்க்க முடியாது. அவர்களது முயற்சியும் வேண்டும்.

வேலையினை முழுமையாக, கவனமாக, முழு மூச்சுடன் செய்ய வேண்டும். பிறருக்கு முன்னால் நம்மை உயர்த்திக் கொள்வதற்காக அது இருக்கக் கூடாது.

உங்களது வெற்றி உங்களுக்கும், உங்களைச் சார்ந்தவர்களுக்கும் மட்டுமே மகிழ்ச்சி தரும்.

இன்றைய கால கட்டத்தில் அநேக நட்புகள் காரண, காரியம் ஒட்டியே இருக்கின்றது. அத்தி பூத்தாற்போல் நல்ல உயர் நட்பு அரிதாகக் காணப்படுகின்றது.

99.9 சதவீதம் அல்லது 99 சதவீதம் வரை உங்கள் மீது உண்மையான அன்பு கொண்டவர்கள் அவரவர் பெற்றோர்களே.

நம் வாழ்வில் நம்மோடு வாழ்வில் தொடர்பில் வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் இருக்கின்றது. அது முடிந்தவுடன் அவர்கள் பிரிந்து விடுகின்றனர். உறவு, நட்பு, பகை, எல்லாமே இப்படித்தான். ஆகவே மன உறுதி வேண்டும்.

பணம் என்பது வாழ்வில் இன்றியமை யாததுதான். ஆனால் ஏனோ அதனால் அனைத்தினையும் சாதிக்க முடிவதில்லை.

அனைவரிடமும் புன்னகைப்பதற்கும், அனைவரையும் நம்புவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது.

ஒருவரின் செயல், பண்பு, வாழும் முறை இவை எந்த வயதிலும் அவரை உண்மையான அழகோடு வைக்கின்றது.

பேசினால் அளவாகவும் கருத்தோடும் பேச வேண்டும் என்று கூறுவார்கள். வார்த்தைகள் அறிவை வளர்க்கலாம், அன்பை வளர்க்கலாம். வார்த்தைகளால் ஒருவரை மனக்கொலை செய்யக் கூடாது. இதனால் தான் பல நேரங்களில் பேசாமல் இருப்பதே நல்லது. அவை எந்தெந்த நேரங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள் என பார்ப்போம்.

கோபம் கொப்பளித்து தாறு மாறாக வார்த்தைகள் கொட்டி விடும் என்று தோன்றுகின்றதா? அப்படி ஒரு நிலை ஏற்படும் என்றால் உடனே அந்த இடத்தை விட்டே ஓடி விடுங்கள். தனியாக ஒரு அறையில் கூட தாளிட்டு இருங்கள். உங்கள் ஆவேசத்தினை ஒரு தலைகாணியினை நன்கு அடித்து அந்த மிருக வேகத்தினை வெளியில் எடுத்து விடுங்கள். ஆனால் ஒரு வார்த்தை கூட பேச விடாதீர்கள். இந்த வேகம் உங்களுக்கும், எதிராளிக்கும் ஆறா காயத்தினை, பகையினை வளர்த்து விடும்.

ஏதேனும் ஒரு விஷயத்தில் உங்கள் வார்த்தை எதிராளியை புண்படுத்தும் என்ற நிலை இருந்தால் பேசாதீர்கள். கருத்தினை சொல்வதற்கும் ஒரு முறை உண்டு. நாவினால் சுட்ட புண் ஆறாது என வள்ளுவர் பெருமான் சும்மாவா சொன்னார்.

சில நேரங்களில் கடும் வார்த்தைகள் நட்பினையே முறித்து விடலாம். 5 நிமிடம் மனதினையும், நாக்கினையும் கட்டுப்படுத்தினால் போதும். நட்பு நிலைத்து விடும்.

சொல்வதினை அமைதியான தொனியில், பண்பான வார்த்தைகளில் சொன்னால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். அதனை விட்டு மிக சத்தம் போட்டு கத்தி பேசினால் பிரச்சினை பூதாகரமாகும்.

அதிக உணர்ச்சி வசப்பட்டு பேசினால் ரோஷம், கோபம், தேவையில்லா வீர வசனம், அழுகை என பிரச்சினை தலை விரித்து ஆடும். எனவே உணர்ச்சி வசப்பட்டு எதுவும் பேச வேண்டாம்.

சில நிகழ்வுகளை நம் மனதிற்குள் நாம் ஏற்கக் கூடாது. அவை நம்மைப் பற்றியது அல்ல. பிறரைப் பற்றியது.

உதாரணமாக,

சிலர் நம்மை வெறுக்கலாம். என்ன காரணம் என நீங்கள் வருந்தலாம். உண்மையில் அவர்களின் பொறாமை குணமே அவர்களை உங்கள் மீது வெறுப்பு கொள்ளச் செய்கின்றது. அவர்கள் அடைய நினைத்த, வாழ நினைத்த ஒன்று உங்களுக்கு கிட்டி விட்டால் அவர்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அதுவே வெறுப்பாக மாறி விடுகின்றது.

உங்களை ஒருவர் உற்று பார்க்கின்றார் என்றால் அவர் மனதில் எத்தனையோ காரணங்கள், போட்டி, பொறாமைகள் இருக்கலாம். இதற்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.

நன்றாக இருக்கும் உங்களுடன் ஒருவர் முறிவை ஏற்படுத்திக் கொள்கின்றனர் என்றால் கவலைப்படாதீர்கள். மாறாக மகிழ்ச்சி அடையுங்கள். அவர் உங்களுக்கு உதவிதான் செய்கின்றார்.

எது நடந்தாலும் அதற்கு நீங்களே காரணம் என்று எண்ண வேண்டாம். ஏதோ ஒரு கடுமையான நிகழ்வு நடக்கிறதென்றால் அதன் பின்பே ஒரு நல்ல நிகழ்வும் வரும்.

மேலும் சில குறிப்புகள் அறிவோம்:

எனக்கு அவரைத் தெரியும். இவர் நான் கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டார் என பீத்துபவர்களிடம் இருந்து எட்ட தள்ளி இருப்போம்.

நம்மை பகடை காய் போல் பயன்படுத்தி வேலை வாங்குபவர்களிடம் இருந்து தள்ளி இருப்போம்.

யாரிடமும் ஏறி விழுந்து பழக வேண்டாமே. ஒரு அளவு கோல் இருக்கட்டுமே.

நம்மை நம்ப கற்றுக் கொள்ள வேண்டும்.

தன்னம்பிக்கை இல்லாதவருக்கே பொறாமை ஏற்படும்.

பார்ப்பவர்கள் எல்லாம் உங்கள் ஆத்மார்த்த நண்பர்கள் அல்ல.

அறிவோம்! கடைபிடிப்போம்!

Compiled: trendnews100.com
Article in Hindi, ट्रेंडिंग Blog, Tranding letest Blog in hindi, Blog news, latest Blog news,

disclaimer : इस पोस्ट में मौजूद किसी भी कंटेंट के लिए Trend News की कोई जिम्मेदारी या दायित्व नहीं है(article news in hindi)ं. पाठकोंहमारे facebook, Twitter पेजों के जरिए हमसे संपर्क कर सकते है(article news in hindi)ं।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button