Blog

Article : மரகத நடராஜரின் மகிமை

ஒரு சமயம் உத்திரகோசமங்கை தலத்தில் வாழ்ந்து வந்த மரக்காயர் என்பவர் வழக்கம் போல் சிவனை தொழுது வணிகம் செய்வதற்காக கடலுக்குள் புறப்பட்டு சென்றார்.

திடீரென்று கடலில் ஏற்பட்ட தட்ப வெப்பநிலை மாறுபாட்டால் சுழற்காற்றும், மழையோடும் சேர்ந்து கடலில் கொந்தளிப்பு ஏற்படுகிறது.

மரக்காயரின் படகு புயற்காற்றால் அங்குமிங்கும் கடலில் அலைக்கழிக்கப்படுகிறது.

தன்னை காப்பாற்றும் படி மரக்காயர் ஆலவாய் அழகன் ஆடலரசன் நடராஜ பெருமானை நோக்கி வேண்டுகிறார்.

புயல் காற்றினால் அடித்து செல்லப்பட்ட மரக்காயரின் படகு கடல் நடுவில் காணப்பட்ட ஒரு பாறையில் சென்று மோதுகிறது.

படகு பாறை மீது மோதிய வேகத்தில் சிவனருளால் படகு சேதம் அடையாமல் பாறை உடைந்து படகில் விழுகின்றது.

பாய்மர படகில் பாறை விழுந்ததும் அதற்காகவே காத்திருந்தது போலவே காற்றும், மழையும் நின்று கடல் அமைதி ஆகின்றது.

கடலுக்கு சென்ற மரக்காயரை காணவில்லையே என்ற பதை பதைப்புடன் மரக்காயரின் உறவினர்கள் கடற்கரையில் வருத்தமுடன் காத்திருக்கின்றனர்.

அதே சமயம் மரக்காயர் பாய்மரம், துடுப்பு துணையோடு படகில் விழுந்த பாறைகளோடு கரைக்கு திரும்பி வருகிறார்.

மரக்காயர் படகில் கொண்டு வந்த பாசி படர்ந்த பாறைக் கற்களை என்ன செய்வது என தெரியாமல் வீட்டின் படிக்கல்லாக இருக்கட்டும் என தலைவாசலில் போட்டு வைக்கின்றார்.

மரக்காயரின் வீட்டின் நபர்கள் வீட்டினுள் நுழையும் போதும் வீட்டை விட்டு செல்லும் போதும் வாசற்படியாக பயன்படுத்திய பாறை கல் மீது நடந்து நடந்து பாறை மேலிருந்த கடற்பாசி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி சூரிய வெளிச்சத்தில் பள பளவென அந்த பாறை மின்னத் தொடங்குகிறது.

தன் வீட்டு வாசற்படியில் இருப்பது ஏதோ உயர் ரக பாறை என்பதை உணர்ந்த மரக்காயர் பாண்டிய மன்னனின் சபைக்கு அந்த கற்களை கொண்டு செல்கிறார்.

பாண்டிய மன்னர் கற்தச்சர்கள் மற்றும் சிற்பிகளை கொண்டு பாறையை சோதித்து பார்க்கின்றார்.

பாறையை சோதித்து பார்த்த சிற்பிகள் மன்னரிடம் இந்த பாறை விலைமதிப்பற்ற அபூர்வ மரகதக்கல்லால் ஆனது. உலகில் வேறு எங்கு தேடினாலும் நிச்சயம் இந்த அளவு பெரிய தரமான மரகத பாறை கிடைக்காது என மன்னனிடம் கூறுகின்றனர்.

பாண்டிய மன்னரும் மரக்காயருக்கு பச்சை பாறைக்கற்களுக்கு உரிய பொற்காசுகளை வெகுமதியாக அளித்து வழி அனுப்பி வைத்தார்.

விலை மதிப்பற்ற பொருட்களை இறைவனுக்கு வழங்கும் அன்றைய அரசு வழக்கத்தின் படி அந்த பச்சை மரகத பாறையை கொண்டு ஆடல்வல்லான் நடராஜ பெருமானை சிலை வடிவில் வடிக்க திட்டமிடுகிறார் பாண்டிய மன்னன்.

இலங்கை சிற்பி பாண்டிய மன்னரின் அரச சபைக்கு வந்து பாறை வடிவில் இருந்த பச்சை மரகத கல்லின் அளவை பார்த்து மயக்கமுற்று கீழே விழுகிறார்.

தன்னால் இவ்வளவு பெரிய மரகத கல்லில் இருந்து நடராஜ பெருமானை சிலையாய் வடிக்க இயலாது என இலங்கைக்கே திரும்ப செல்கிறார்.

நாட்கள் கடந்தன. தினமும் பாண்டிய மன்னன் மன வருத்தத்தோடு உத்திரகோசமங்கை மங்களேஸ்வரர் சன்னதி முன் நின்று மரகத நடராஜர் சிலை வடிக்க உபாயம் அருளும் படி பிரார்த்தனை செய்கிறார்.

ஒரு நாள் மன்னா! மனம் சடையாதே! மரகத நடராஜர் சிலையை சிவனருளால் நான் வடித்து தருகிறேன் என ஒரு குரல் ஒலிக்கின்றது.

குரல் வந்த திசையை நோக்கி கோவிலில் பிரார்த்தித்து கொண்டிருந்த பாண்டிய மன்னரும் பாண்டிய தேச மக்களும் போய் பார்க்கின்றனர்.

சிவனடியார் தோற்றத்தில் தீட்சண்யமான ஒளி பொருந்திய கண்களுடன் சித்தரை போன்ற தோற்றத்தில் நிற்கும் பெரிய மனிதர் ஒருவரை மன்னரும் மக்களும் கண்டனர்.

பாண்டிய மன்னனை அழைத்த அந்த மாமனிதர் வேறு யாரும் இல்லை. சிவனடியாரும், சித்தருமான சண்முக வடிவேலர் தான் அந்த மாமனிதர் ஆவார்.

தனது முழு சிற்பத்திறனை சிவனருளால் பயன்படுத்தி பெரிய மரகத பாறையில் அஞ்சரை அடி உயர நடராஜர் சிலையை ஒன்றரை அடி உயர பீடத்துடன் மிகவும் நுணுக்கமாக நடராஜர் திருக்கரங்களில் உள்ள நரம்புகள் தெரியும் அளவிற்கு வடிவமைத்தார் சித்தர் சண்முக வடிவேலர்.

விலை மதிப்பற்ற பச்சை மரகத கல் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்து விட்டு நடராஜரின் முன் புறம் கருவறையை அமைக்கும் படி மன்னனுக்கு அறிவுரை வழங்குகிறார் சித்தர்.

ஒலியின் அதிர்வினால் உதிரும் தன்மை கொண்டது பச்சை மரகதக்கல். எனவே எப்போதும் சந்தனக்காப்பால் மரகத நடராஜரை சார்த்தி வைத்து வழிபடும் படி மன்னனுக்கும், வேதியர்களுக்கும் அறிவுரை கூறுகிறார் சித்தர்.

மரகத நடராஜரை நாங்கள் கண்குளிர காண முடியாதா? என மன்னனும் மக்களும் சித்தரை பார்த்து ஏக்கத்தோடு கேட்கின்றார்.

மார்கழி திருவாதிரை அன்று மரகத நடராஜரை சந்தனகாப்பு சார்த்தாமல் தரிசியுங்கள்.

அன்றைய திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தின் போது அதிக ஒலி எழுப்பும் கொட்டு, மத்தளம், முரசு போன்ற வாத்தியங்களை அடிக்க வேண்டாம். அந்த ஒலி அதிர்வினால் மரகத நடராஜர் சிலை சேதமடையும் என அறிவுறுத்துகிறார் சித்தர்.

இன்றளவும் உத்திரகோசமங்கை ஆலயத்தில் அதிக ஒலி எழுப்பும் வாத்தியங்களை வாசிக்காமல் இருப்பதால் “கொட்டு அடிக்காத கோசமங்கை ஆலயம்” என்ற சொலவடையில் உத்திரகோசமங்கை ஆலயத்தை மக்கள் அழைப்பதுண்டு.

கண்டவரை கவரும், பார்த்தவரை பரவசப்படுத்தும் மரகத கல் நடராஜரை நீங்களும் மார்கழி திருவாதிரையின் போது கண்ணார கண்டு தரிசித்து ஜென்ம சாபல்யம் அடையுங்கள்.

சிறந்த சிவபக்தன் ஒருவனே தனக்கு கணவனாக வர வேண்டும் என சிவனை நோக்கி மண்டோதரி தவமியற்றுகிறாள்.

மண்டோதரிக்கு வரம் அளிக்க செல்லும் முன் சிவபெருமான் தான் பாதுகாத்து வந்த சிவஞான போதம் எனும் வேத ஆகம நூல் ஒன்றை முனிவர்களிடம் கொடுத்து தான் திரும்பி வரும் வரை அந்த நூலை பத்திரமாக பாதுகாத்து வைத்து கொள்ளும் படி கூறி விட்டு செல்கிறார்.

மண்டோதரியின் முன்பு பால சிவனாக குழந்தை வடிவில் காட்சி புரிகிறார் சிவன்.

சிறந்த சிவ பக்தன் ஆன ராவணேஸ்வரனை மணமகனாக ஏற்று கொள்ளும் படி மண்டோதரியிடம் கூறுகிறார் சிவன்.

உத்திரகோசமங்கை தலத்தில் வைத்து மண்டோதரிக்கும், ராவணனுக்கும் திருமணம் நடைபெறுகிறது.

அகம்பாவம் மிக்க ராவணன் திருமணத்திற்கு முன் தன் புஷ்பக விமானத்தில் கயிலை மலையைத் தாண்டி பறக்க முயன்றான்.

சிவபார்வதியின் இருப்பிடத்திற்கு மேலாக எவருடைய வாகனமும் பறக்கக்கூடாது. நவக்கிரகங்கள் கூட கயிலை மலையை தாண்டி செல்லாது. கைலாச மலையை சுற்றி தான் செல்லும்.

ராவணா நீயும் சுற்றிப்போ… என கயிலைமலையின் காவலரான நந்தி தேவர் ராவணனை எச்சரித்தார்.

நந்தி தேவரின் அறிவுரையை கேளாத ராவணன் நான் நினைத்தால் இந்த மலையையே தூக்கி வீசி விடுவேன் என கூறி ஆணவத்தோடு தன் இருபது கைகளாலும் கயிலாய மலையை பெயர்த்தெடுக்க முற்பட்டான்.

ராவணனின் செயலால் கோபமுற்ற சிவன் தன் கால் பெரு விரலால் கயிலை மலையை அழுத்த ராவணனின் கை உள்ளே சிக்கி கொண்டது.

கைவலி தாளாமல் அழுது புலம்பினான் ராவணன். ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து கயிலை மலையில் மாட்டிய கையை எடுக்க முடியாமல் அழுது கொண்டே இருந்தான் ராவணன்.

ராவணன் இவ்வாறு அழுவதை கண்டு யாரும் கவலை படவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் அவ்வழியே வந்த வாகீசர் எனும் முனிவர் ராவணன் மேல் இரக்கப்பட்டு, சிவனைப் புகழ்ந்து பாடு, நீ விடுதலை அடைவாய் என ராவணனுக்கு உபாயம் கூறினார்.

ராவணனும் தன் நரம்புகளை யாழாக உருவாக்கி சாம கானம் இயற்றி சிவனாரை புகழ்ந்து மனமுருகி பாடுகிறான்.

ராவணன் இசையில் மனம் நெகிழ்ந்த சிவன் அவனை வாழ்த்தி ஐம்பது லட்சம் ஆண்டுகள் வாழும் வரத்தை அருளி சந்திரகாந்தம் எனும் வாளினை பரிசாக வழங்குகிறார்.

வாகீஸ்வர முனிவர் ராவணனுக்கு உபாயம் அருளிய செயல் நந்தி தேவருக்கு பிடிக்கவில்லை.

தெய்வ நிந்தனை செய்த ஒருவனுக்கு, அதிலிருந்து விடுதலையடைய யோசனை சொன்ன வாகீசரை பூமியில் பிறக்கும்படி சபித்து விட்டார். அந்த வாகீச முனிவரே திருநாவுக்கரசராக மறு பிறவியில் பூமியில் பிறந்தார்.

ஏற்கனவே சிவ தண்டனை பெற்ற ராவணன் தனது திருமணத்தில் தோன்றிய பாலசிவனை யாருமே தீண்ட இயலா பொன்னார் மேனியனை தீண்ட முற்படுகிறான்.

அந்த நேரத்தில் சிவன் அக்னியாக மாறி ராவணனை சோதிக்கின்றார்.. இறைவனின் வெம்மையை தாங்க இயலாமல் ராவணன் தனது கைகளில் இருந்து பாலசிவனை கீழே இறக்கி விடுகிறான்.

பொன்னார் மேனியரான சிவனை, ராவணன் தீண்டியதால் உலகில் அனைத்து பொருட்களும் தீப்பற்றி எரிகின்றது.

சிவன் முனிவர்களிடம் விட்டு சென்ற சிவ ஞானபோதம் என்ற நூலுக்கும் தீயினால் ஆபத்து வருகின்றது.

சிவனடியார்களான ஆயிரத்தோரு முனிவர்களில் ஆயிரம் முனிவர்கள் சிவன் தங்களிடம் தந்த சிவஞான போதம் என்ற நூலை காப்பாற்ற வழியின்றி, சிவன் வந்து கேட்டால் என்ன பதில் சொல்வது என்ற பயத்தில்ஆலயத்தில் அமைந்துள்ள தீர்த்தத்தில் குதித்து இறந்தனர்.

ஆயிரம் சிவனடியார்கள் சிவனுக்காக, சிவனாருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற உயிரை மாய்த்த தீர்த்தம் “அக்னி தீர்த்தம்” என்ற பெயரினை பெற்றது.

ஆயிரம் சிவனடியார்கள் உயிரை மாய்த்த இடத்தில் சிவகடாட்சம் எவ்வாறு இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா.?!

அரிதிலும் அரிதான சகஸ்ரலிங்கம் ஆனது அந்த ஆயிரம் முனிவர்கள் மறைந்த இடத்தில் இருந்து தோன்றுகிறது.

ஆயிரத்தோரு முனிவர்களில் மாணிக்க வாசகர் மட்டும் என்னை சோதிப்பதுவும் சாதிக்க வைப்பதுவும் சிவமே நீ மட்டுமே! என தைரியமாக இருந்து சிவஞான போதம் என்ற நூலை தீயில் இருந்து அழியாமல் காப்பாற்றினார்.

தன்னை நம்பி பற்றோடு தன் பாதக்கமலங்களை நம்பி பிடித்த மாணிக்கவாசகருக்கு தன்னை போலவே லிங்க வடிவம் தந்து கவுரவித்தார் சிவபெருமான்.

உத்திரகோசமங்கை தலத்தில் மாணிக்கவாசகர் இப்போதும் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.

தொடர்புக்கு-isuresh669@gmail.com

Compiled: trendnews100.com
Article in Hindi, ट्रेंडिंग Blog, Tranding letest Blog in hindi, Blog news, latest Blog news,

disclaimer : इस पोस्ट में मौजूद किसी भी कंटेंट के लिए Trend News की कोई जिम्मेदारी या दायित्व नहीं है(article news in hindi)ं. पाठकोंहमारे facebook, Twitter पेजों के जरिए हमसे संपर्क कर सकते है(article news in hindi)ं।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button